மட்டக்களப்பு திருகோணமலை வீதி மெதடிஸ் தேவாலயத்திற்கு அருகிலுள்ள வீதி பாதசாரி கடவையில் கடக்க முற்பட்டவரை முச்சக்கரவண்டி மோதிய விபத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஆண் ஒருவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (25) உயிரிந்துள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
வந்தாறுமூலை களுவங்கேணியைச் சேர்ந்த 33 வயதுடைய புண்ணியமூர்த்தி புஸ்பாகரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை அன்று (23) காலை 10.00 மணியளவில் திருகோணமலை வீதியில் உள்ள மெதடிஸ் தேவாலயத்துக்கு அருகிலுள்ள வீதி கடவை வெள்ளைக் கோட்டின் ஊடாக பாதசாரி ஒருவர் துவிச்சக்கரவண்டியுடன் கடக்க முற்பட்டபோது வேகமாக பிரயாணித்த முச்சக்கரவண்டி மோதியதையடுத்து படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதில் முச்சக்கரவண்டி சாரதி கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை எதிர்வரும் 30 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்

இதனையடுத்து குறித்த சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.









