செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளுக்கான மொழிபெயர்ப்பு மென்பொருளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மொறட்டுவ பல்கலைக்கழகம் உட்பட பல பல்கலைக்கழகங்கள், தனியார் துறையுடன் இணைந்து இந்த மென்பொருளை உருவாக்க ஒத்துழைத்து வருவதாக டிஜிட்டல் பொருளாதார பிரதியமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார். இதேவேளை அடுத்த ஆறு மாதங்களுக்குள் இந்த மென்பொருள் பொதுமக்களுக்குக் கிடைக்கும் என்று அவர் மேலும் கூறினார்.
புதிய மென்பொருள் பேசும் சிங்கள உள்ளடக்கத்தை சில நொடிகளில் தமிழில் மொழிபெயர்க்கும் திறனைக் கொண்டிருக்கும் என்றும், நேர்மாறாகவும் இது இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.








