தென்னிந்தியாவின் பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான நடிகர் கமல்ஹாசன் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில், மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன், கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன், மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.
லைவர் கமல்ஹாசன் எதிர்வரும் 25 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.








