Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கொலைக் குற்றவாளிகள் தப்ப முடியாது அவர்களுக்குத் தண்டனை உறுதி; அமைச்சர் பிமல்

கொலைக் குற்றவாளிகள் தப்ப முடியாது அவர்களுக்குத் தண்டனை உறுதி; அமைச்சர் பிமல்

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

“கொலைக் குற்றவாளிகளைப் பாதுகாக்கவே ரணில் – ராஜபக்ஷ தரப்பு ஷானி அபேசேகர, ரவி செனவிரத்ன உள்ளிட்ட திறமையான அதிகாரிகளைப் பதவியில் இருந்து நீக்கியது. ஆனால், எமக்கு எந்தத் தனிப்பட்ட தேவையும் கிடையாது.

எனவே, நாம் விசாரணைகளுக்காகத் திறமையான அதிகாரிகளை ஈடுபடுத்துவோம். கொலைக் குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக் கொடுப்போம். அவர்கள் ஒருபோதும் தப்ப முடியாது.

இவ்வாறு போக்குவரத்து நெடுஞ்சாலைகள் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுக்கொடுக்குமாறு கர்தினால் உட்பட கத்தோலிக்க திருச்சபை தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்து வருகின்றது. எம்மிடம் மாத்திரமல்ல இதற்கு முன்னர் பதவியில் இருந்த அரசிடமும் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால், என்ன நடந்தது? குற்றத்தை மறைப்பதற்குச் செய்யக்கூடிய ஒரு வழிமுறையே அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்குவதாகும். இதற்கமைய கோட்டாபய ராஜபக்ஷ பதவிக்கு வந்ததன் பின்னர் சி.ஐ.டியில் இருந்த 600 இற்கும் மேற்பட்ட அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கினார். அதேபோன்று அதிகாரிகளைப் பதவி நீக்கம் செய்தனர். விளக்கமறியில் வைத்தனர். சாட்சியங்களைத் திரட்டும் திறமையான அதிகாரிகளுக்குப் பதிலாகத் திறமையற்ற அதிகாரிகளைப் பதவிகளுக்கு அமர்த்தினார்கள்.

ரணில் – ராஜபக்ஷ தரப்பு ஊழல் மோசடியில் ஈடுபட்டது ஒருபுறம் இருக்கப் பொலிஸ் திணைக்களம், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகிவற்றைக் குற்றவாளிகளைப் பாதுகாப்பதற்காகவே பயன்படுத்தினார்கள்.

எனவே, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளத் திறமையான அதிகாரிகளை நியமிக்குமாறு கர்தினால் மாத்திரம் அல்ல முழு கத்தோலிக்க சமூகமும் எம்மிடம் கோரிக்கை விடுத்தது.

பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது வழக்கு விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்ட போது சி.ஐ.டியின் பணிப்பாளர் ஷானி அபேசேகர முக்கிய சாட்சியாளராகப் பெயரிடப்பட்டுள்ளார். இதற்கு அவரது மனைவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.” – என்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

323 கொள்கலன்கள் தொடர்பில் சுங்கத்திடம் தகவல் இல்லை என அறிவித்தது
செய்திகள்

323 கொள்கலன்கள் தொடர்பில் சுங்கத்திடம் தகவல் இல்லை என அறிவித்தது

August 15, 2026
சனிக்கிழமைகளில் கடமைகளை புறக்கணிக்க கிராம உத்தியோகத்தர்கள் தீர்மானம்
செய்திகள்

சனிக்கிழமைகளில் கடமைகளை புறக்கணிக்க கிராம உத்தியோகத்தர்கள் தீர்மானம்

August 15, 2026
ஜப்பானில் இரு இலங்கையர்களுக்கு இடையில் ஏற்பட்ட சண்டையால் ஒருவர் கொலை
செய்திகள்

ஜப்பானில் இரு இலங்கையர்களுக்கு இடையில் ஏற்பட்ட சண்டையால் ஒருவர் கொலை

August 15, 2026
3.1 கிலோ எடையுள்ள சிறுநீரகக் கல்லை சத்திரசிகிச்சை மூலம் அகற்றிய திருகோணமலை பொது வைத்தியசாலை வைத்தியர் குழு
செய்திகள்

3.1 கிலோ எடையுள்ள சிறுநீரகக் கல்லை சத்திரசிகிச்சை மூலம் அகற்றிய திருகோணமலை பொது வைத்தியசாலை வைத்தியர் குழு

August 15, 2026
சிறுவர்களை பாதிக்கும் தற்போதைய வானிலை குறித்து எச்சரிக்கை
செய்திகள்

சிறுவர்களை பாதிக்கும் தற்போதைய வானிலை குறித்து எச்சரிக்கை

August 15, 2026
9 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சவால் விடுத்த மிப்ளால் மௌலவி
செய்திகள்

9 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சவால் விடுத்த மிப்ளால் மௌலவி

August 15, 2026
Next Post
காணித் தகராறால் இளம் யுவதி ஒருவர் வெட்டிப் படுகொலை; அம்பாந்தோட்டையில் சம்பவம்

காணித் தகராறால் இளம் யுவதி ஒருவர் வெட்டிப் படுகொலை; அம்பாந்தோட்டையில் சம்பவம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.