சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி கீதா கோபிநாத், தனது பதவியை ராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா நேற்று (21) இதனை அறிவித்தார்.
கீதா கோபிநாத் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறையில் பொருளாதாரப் பேராசிரியராக இணைந்துக் கொள்வதற்காக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அவர் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்தார்.

கீதா கோபிநாத் 2019 ஜனவரியில் IMF இல் தலைமைப் பொருளாதார நிபுணராக இணைந்துக் கொண்ட நிலையில், 2022 ஜனவரியில் முதன்மை பிரதி முகாமைத்துவ பணிப்பாளராக பதவி உயர்வு பெற்றார்.
கோபிநாத் IMF வரலாற்றில் முதல் பெண் தலைமைப் பொருளாதார நிபுணரும் ஆவார்.
தனது ராஜினாமா குறித்து கருத்து தெரிவித்த கீதா கோபிநாத், சர்வதேச நிதி மற்றும் மெக்ரோ பொருளாதாரத்தின் ஆராய்ச்சி எல்லைகளை தொடர்ந்து முன்னேற்றவும், அடுத்த தலைமுறை பொருளாதார வல்லுநர்களுக்கு உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள பயிற்சி அளிக்கவும் தான் எதிர்ப்பார்த்துள்ளதாக கூறினார்.








