இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் சுமார் 72 சதவீதத்துக்கும் அதிகமானோர் இன்னும் தண்டனை விதிக்கப்படாத விளக்கமறியல் கைதிகள் என அண்மைய சிறைத் தரவுகள் தெரிவிக்கின்றன.
கிடைக்கப்பெற்ற புள்ளிவிபரங்களின்படி, மொத்தம் 28,646 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 26,935 பேர் ஆண்களும், 1,711 பேர் பெண்களும் ஆவர்.
அதேவேளை, தண்டனை பெற்ற கைதிகளின் எண்ணிக்கை 10,870 ஆகும். இதில் 10,588 பேர் ஆண்களும், 282 பேர் பெண்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கை சிறைகளில் உள்ள மொத்த கைதிகளில் ஆண்கள் 37,523 பேரும், பெண்கள் 1,993 பேரும் இருப்பதுடன், சிறைக் கைதிகளில் ஆண்களே பெரும்பான்மையாக காணப்படுகின்றனர்.
இதற்கிடையில், இலங்கை சிறைச்சாலைகள் கடுமையான நெரிசலை எதிர்கொண்டு வருவதாகவும், நாட்டின் சிறைகளில் சுமார் 41,000-க்கும் மேற்பட்ட கைதிகள் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றின் கொள்ளளவு அதைவிட மிகவும் குறைவாக இருப்பதாகவும் அதிகாரப்பூர்வ மற்றும் சர்வதேச தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.








