மட்டக்களப்பு திராய்மடு மௌண்டன் கிட்ஸ் பாலர் பாடசாலையின் இல்ல விளையாட்டு போட்டி அதிபர் திருமதி.மகீமா நந்தகுமார் தலைமையில் நேற்று முன்தினம் (25) இடம்பெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு கல்வி வலய முன் பிள்ளை பருவ உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி அனுரேகா விவேகானந்தன், கௌரவ அதிதியாக உழைக்கும் மகளீர் அபிவிருத்தி நிறுவன பணிப்பாளர் திரு .தயாபரன், சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி இணைப்பாளர் திரு V.முரளிதரன், மண்முனை வடக்கு பிரதேச செயலக முன் பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.T.மேகராஜ் மற்றும் முன்பள்ளி நிர்வாகி திரு.S நந்தகுமார், WWDF இணைப்பாளர் திருமதி.சசியந்தினி,DRC college France A.தர்ஷன் , பெற்றோர்கள் ஆசிரியர்கள், பிள்ளைகள் பிரதேச மக்கள் கலந்து சிறப்பித்தார்கள்.



























குறித்த நிகழ்வில் சிறார்களின் விளையாட்டு நிகழ்வுகள் சியாமலா இல்லம் மற்றும் தயாபரி இல்லம் என இருபிரிவுகளாக பிரிக்கப்பட்டு நடைபெற்றன.
அதேசமயம் கௌரவ அதிதியாக கலந்துகொண்ட உழைக்கும் மகளீர் அபிவிருத்தி நிறுவன பணிப்பாளர் திரு .தயாபரன், முன்பள்ளி ஆசிரியர்களால் கெளரவிக்கப்பட்டதுடன், விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்ற சிறார்களுக்கு பரிசில்களும், சிறிய கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.








