மஸ்கெலியா சாமிமலை பிரதான வீதியில் பனியன் பலத்திற்கு அருகில் உள்ள ஒரு வீட்டின் மீது இடிந்து விழுந்த மண் மேட்டின் கீழ் புதைந்திருந்த ஐந்து பேரை அப்பகுதி மக்கள் மீட்டு வைத்தியசாயில் அனுமதித்துள்ளனர்.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக (05) ஆம் திகதி மஸ்கெலியா பகுதியில் பெய்த கனமழை காரணமாக, வீடொன்றின் மீது பாரிய மண் மேடு சரிந்து வீழ்ந்த நிலையில் அவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ஐவர் மீது இன்று (06) மதியம் 12:00 மணியளவில் மற்றொரு மண் மேடு சரிந்து விழுந்துள்ளது.
பின்னர், மஸ்கெலியா வைத்தியசாலையின் வைத்தியர்களின் உதவியுடன், பொது மக்கள் இணைந்து மண் மேட்டின் கீழ் புதையுண்டிருந்த ஐவரையும் மீட்டு மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்ததையடுத்து அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர் .
சம்பவம் குறித்து மஸ்கெலியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .








