காசா பகுதியில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் குறித்து சவூதி அரேபியா வெளியிட்ட விசேட அறிக்கை வன்மையாகக் கண்டனம் தெரிவித்துள்ளது.
சவூதி வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரிகள் காசா பகுதியை மீண்டும் ஆக்கிரமிக்க எடுத்த முடிவை சவூதி அரேபியா வன்மையாக எதிர்த்து கண்டிக்கிறது” என்றும், பாலஸ்தீன மக்கள் மீது பட்டிணம், கொடூரமான செயல்பாடுகள் மற்றும் இன அழிப்பு குற்றங்களை தொடர்ச்சியாகச் செய்யும் நடவடிக்கைகளை “தெளிவான முறையிலும் உறுதியான முறையிலும்” கண்டிக்கின்றதாகவும் கூறப்பட்டுள்ளது.

அறிக்கை மேலும், இஸ்ரேல் பாலஸ்தீன மக்களின் உணர்ச்சி, வரலாறு மற்றும் சட்ட ரீதியான உரிமைகளை புரிந்துகொள்ளத் தவறி, சர்வதேச சட்டங்களும் மனிதாபிமானக் கொள்கைகளும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக வலியுறுத்துகிறது.

சர்வதேச சமூகம் மற்றும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை உடனடியாக இஸ்ரேலின் தாக்குதல்களை நிறுத்தாததை, “சர்வதேச ஒழுங்கு, சட்டபூர்வத்தன்மை மற்றும் உலக அமைதிக்கு பெரிய அச்சுறுத்தலை உருவாக்குகிறது; இதன் விளைவாக இன அழிப்பு மற்றும் கட்டாய இடம்பெயர்வு நிகழக்கூடும்” என சவூதி அரேபியா எச்சரித்துள்ளது.
மேலும், பாலஸ்தீன மக்களைச் சூழ்ந்துள்ள மனிதாபிமான பேரழிவை நிறுத்த சர்வதேச சமூகம் “வலுவான மற்றும் உறுதியான நடவடிக்கைகள்” எடுக்க வேண்டும் எனவும், 1967 எல்லைகளுக்குள் கிழக்கு ஜெருசலேமை தலைநகராகக் கொண்டு, சுயாட்சி கொண்ட பாலஸ்தீன அரசை உருவாக்கும் “இரு நாடு தீர்வு” மட்டுமே நிலையான அமைதிக்கான வழி எனவும் அறிக்கை உறுதிப்படுத்துகிறது.









