17.08.2025 ஞாயிற்றுக்கிழமை இரவு 9.00 மணி அளவில், வடக்கு வங்காள விரிகுடாவில் இந்தியாவின் ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கு இடையில் காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகியுள்ளது.
இதன் தாக்கத்தால், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு மிதமான மழை பொழியக்கூடும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்வரும் இரண்டு தினங்களுக்கு (19.08.2025 வரை) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் குளிரான வானிலை நிலவும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








