இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிறைச்சாலை மருத்துவமனையின் முன்னாள் பிரதி பணிப்பாளர் டொக்டர். ஹேமந்த ரணசிங்கவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
ரூபாய் 10 இலட்சம் ரொக்கப் பிணை, ரூபாய் 25 இலட்சம் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணை மற்றும் பயணத் தடையுடன் கொழும்பு நீதவான் நீதிமன்றம் அவரை பிணையில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு, சிறைச்சாலை சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளராக இருந்தபோது, அவர் இலஞ்சம் பெற்றார் எனும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.








