Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புதிய வீட்டிற்குள் போதை ஊசியுடன் இரண்டு இளைஞர்களின் சடலங்கள் மீட்பு

புதிய வீட்டிற்குள் போதை ஊசியுடன் இரண்டு இளைஞர்களின் சடலங்கள் மீட்பு

10 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பதுளை, பசறை, 10 ஆம் கட்டை பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்படும் வீட்டிற்குள் இரண்டு இளைஞர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் பசறை மற்றும் கம்பளை பகுதிகளை சேர்ந்த 28 மற்றும் 33 வயதுடைய இரண்டு இளைஞர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (31) மதியம் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடொன்றிற்கு சென்ற சிறுவன் ஒருவர் ஜன்னல் வழியாக வீட்டினுள் எட்டி பார்த்த போது, இருவர் கீழே விழுந்து கிடப்பதை அவதானித்துள்ளார்.

உடனே அயலவர்களுக்கு தெரிவித்ததை தொடர்ந்து அயலவர்களினால் 1990 அவசர உயிர் காவு வண்டிக்கு அறிவிக்கப்பட்டது.

பின்னர் காவு வண்டி அவ்விடத்திற்கு வந்த பின்னர் காவு வண்டியில் பணிபுரியும் ஊழியர்கள் அவ்விரு நபர்களையும் பரிசோதித்த போது இரண்டு ஆண்களும் உயிரிழந்திருந்தமை தெரியவந்துள்ளது.

இதன் பின்னர் பசறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதுடன் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பசறை பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டனர்.

குறித்த இருவரும் கப்பொலை பகுதியில் உள்ள தனது உறவினர் வீடொன்றிற்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு அவர்களது வீட்டுக்கு மேற்பகுதியில் அமைந்துள்ள புதிதாக நிர்மாணிக்கப்படும் வீடொன்றிற்கு சென்று அங்கு போதை பாவனையில் ஈடுபட்டு இருக்கலாம் எனவும், போதை அதிகரித்தமையே மரணத்திற்கான காரணமாக இருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மரணித்த இருவரும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் எனவும் இறந்தவர் ஒருவரின் கையில் போதைமருந்தை உட்செலுத்தக்கூடிய ஊசி ஒன்றும் காணப்பட்டதாகவும், அவர்கள் மீது போதைப்பொருள் தொடர்பான வழக்குகள் காணப்படுவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பாக பசறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அ.தி.மு.கவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நடிகை கௌதமி விலகல்
அரசியல்

அ.தி.மு.கவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நடிகை கௌதமி விலகல்

June 14, 2026
சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்படலாம்
செய்திகள்

சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்படலாம்

June 14, 2026
பிரபாகரனின் மகன் குறித்து பேசும் ஹக்கீம், 1990 ஜூன் 11-ஐ மறந்துவிட்டாரா? – ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கலீலுர் ரஹ்மான் கேள்வி
செய்திகள்

பிரபாகரனின் மகன் குறித்து பேசும் ஹக்கீம், 1990 ஜூன் 11-ஐ மறந்துவிட்டாரா? – ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கலீலுர் ரஹ்மான் கேள்வி

June 14, 2026
மட்டக்களப்பில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள திருக்குறள் மாநாடு மற்றும் வினாவிடைப் போட்டி; பதிவு செய்யும் முகவரி இணைப்பு
செய்திகள்

மட்டக்களப்பில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள திருக்குறள் மாநாடு மற்றும் வினாவிடைப் போட்டி; பதிவு செய்யும் முகவரி இணைப்பு

June 14, 2026
அரச நிறுவனங்களில் மின்சார சபை மிகப்பெரும் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளதாக தகவல்
செய்திகள்

அரச நிறுவனங்களில் மின்சார சபை மிகப்பெரும் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளதாக தகவல்

June 14, 2026
இலங்கையில் எல் நினோ பாதிப்பு; மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என தகவல்
செய்திகள்

இலங்கையில் எல் நினோ பாதிப்பு; மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என தகவல்

June 14, 2026
Next Post
மட்டக்களப்பு மண்டூர் முருகன் ஆலயத்தில் பெண் ஒருவரின் பணப்பையை திருடிய பெண் கைது

மட்டக்களப்பு மண்டூர் முருகன் ஆலயத்தில் பெண் ஒருவரின் பணப்பையை திருடிய பெண் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.