மதுரை மாநாடு ரசிகர்கள் சந்திப்பு போலத்தான் தெரிகிறது என்று இயக்குநர் அமீர் விமர்சனம் செய்திருக்கிறார்.
மதுரை மாநாட்டில் தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவர் விஜயின் பேச்சு குறித்து இயக்குநர் அமீர் விமர்சனம் தெரிவித்துள்ளார். அமீர், விஜய்யின் பேச்சில் “அங்கிள்” என்று முதல்வர் மு.க. ஸ்டாலினை குறிப்பிட்டது குறித்து கருத்து தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “நடிகராக ‘அங்கிள்’ என்று சொல்வது தவறில்லை,” என்று குறிப்பிட்டார். மேலும், மாநாட்டில் ஒரு இரசிகர் தாக்கப்பட்ட விவகாரத்தில் விஜய்யை முதல் குற்றவாளியாக காவல்துறை சேர்த்தது குறித்து, இது காவல்துறையின் செயல்பாட்டை கேள்விக்குறியாக்குவதாகவும், இது விஜய்க்கும் இரசிகருக்கும் இடையேயான பிரச்சனையாக இருப்பதால் பொது விவாதம் தேவையில்லை என்றும் அமீர் கருத்து தெரிவித்தார்.
மேலும், “தவெக-வின் மதுரை மாநாடு, இரசிகர்கள் சந்திப்பு போலதான் தெரிகிறது, MGR கட்சி ஆரம்பித்த ஒரே காரணத்தால் சிவாஜி, பாக்யராஜ், டி.ஆர், சரத்குமார், சிரஞ்சீவி என எல்லாருமே கட்சி ஆரம்பித்தார்கள். கொள்கைகளும் மக்கள் பணிகளும்தான் ஒருவரை வெற்றிக்கு அழைத்து செல்லும் என்பதே வரலாறு. தான் நிற்க தேவைப்படும் காரணத்தையும் சூழலையும் விஜய்தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.








