Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சஹ்ரானின் மனைவி நீதிமன்றில் முன்னிலை; வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

சஹ்ரானின் மனைவி நீதிமன்றில் முன்னிலை; வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

10 months ago
in செய்திகள்

சஹ்ரானின் மனைவி பாத்திமா ஹாதியா கல்முனை மேல் நீதிமன்றில் முன்னிலையான நிலையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 24 ஆந் திகதி வரை மீள் வழக்கு விசாரணைக்கான மறு தவணை இடப்பட்டுள்ளது.

இது குறித்த வழக்கு கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஜெயராம் ட்ரொக்ஸி முன்னிலையில் நேற்று (2) விசாரணைக்கு வந்தபோதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஜெயராம் ட்ரொக்ஸி முன்னிலையில் தொடர்ச்சியாக இரு நாட்கள் (1.09.2025-2.09.2025) உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்களின் பிரதான குண்டுதாரியான சஹ்ரான் ஹாஷிமின் மனைவி பாத்திமா ஹாதியா ஆஜர்படுத்தப்பட்டு இருந்தார்.

இந்நிலையில் இவ்வாறு மன்றில் முன்னிலையான சஹ்ரான் ஹாஷிமின் மனைவி பாத்திமா ஹாதியாவிடம் இதுவரை காலமும் இடம்பெற்ற வழக்கின் நிகழ்ச்சி குறிப்புகளில் திருத்தம் மேற்கொள்வது குறித்து ஆராயப்பட்டுள்ளன.

குறித்த அவரது வழக்கு தொடர்பான விசாரணை குறிப்புகளில் திருத்தங்கள் மேற்கொள்வதற்காக மன்றிற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் நீதிமன்றத்தில் மனுதாரர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுதர்சி ஹேரத்தும் அரச சட்டத்தரணி மாதினி விக்னேஸ்வரனும் மன்றில் ஆஜராகி இருந்தனர். இதன்போது தமிழ் மற்றும் சிங்கள குறிப்புகளில் காணப்பட்ட வேறுபாடுகளை சுட்டிக்காட்டிய அரச சட்டத்தரணி மாதினி விக்னேஸ்வரர் பல்வேறு திருத்தங்களை மேற்கொள்ள நீதிமன்றத்தின் அனுமதியை கோரி இருந்தார்.

பிரதிவாதியான சஹ்ரான் ஹாசிமின் மனைவி பாத்திமா ஹாதியா சார்பில் மன்றில் ஆஜராகிய சட்டத்தரணி ஷரீப் சலாவுதீன் இதன் போது எதுவித ஆட்சேபனையும் தெரிவிக்க வில்லை.அத்துடன் குறித்த விசாரணை குறிப்புகளில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக நேரத்தை கருத்தில் கொண்டு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 24 ஆந் திகதி வரை மீள் வழக்கு விசாரணைக்கான மறு தவணை இடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அமைதி பேச்சுவார்த்தையின் போது ட்ரம்ப் செய்த காரியம்; கோபத்தில் வெளியேறிய ஈரான்
உலக செய்திகள்

அமைதி பேச்சுவார்த்தையின் போது ட்ரம்ப் செய்த காரியம்; கோபத்தில் வெளியேறிய ஈரான்

June 22, 2026
மன்னாரில் சுகாதார சீர்கேடு; பனை பொருள் உற்பத்தி நிலையம் முற்றுகை!
செய்திகள்

மன்னாரில் சுகாதார சீர்கேடு; பனை பொருள் உற்பத்தி நிலையம் முற்றுகை!

June 22, 2026
ரணில் – சஜித் சந்திப்பு; புதிய அரசியல் கூட்டணிக்கான அடித்தளமா?
செய்திகள்

ரணில் – சஜித் சந்திப்பு; புதிய அரசியல் கூட்டணிக்கான அடித்தளமா?

June 22, 2026
PHI அதிகாரிகள் பெயரில் பண மோசடி; பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை!
செய்திகள்

PHI அதிகாரிகள் பெயரில் பண மோசடி; பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை!

June 22, 2026
காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனையை 2 வருடங்களுக்குள் தீர்ப்போம்; நீதி அமைச்சர் உறுதி!
செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனையை 2 வருடங்களுக்குள் தீர்ப்போம்; நீதி அமைச்சர் உறுதி!

June 22, 2026
பெண் வைத்தியரின் மர்ம மரணம்; தேடப்பட்ட காதலன் குடும்பத்துடன் தலைமறைவு!
செய்திகள்

பெண் வைத்தியரின் மர்ம மரணம்; தேடப்பட்ட காதலன் குடும்பத்துடன் தலைமறைவு!

June 22, 2026
Next Post
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகே வங்கி கணக்கில் ஒரு கோடி ரூபா கண்டுபிடிப்பு

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகே வங்கி கணக்கில் ஒரு கோடி ரூபா கண்டுபிடிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.