Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மனித புதைகுழிகள் உள்ளதாக கூறப்படும் குருக்கள்மடம் பகுதியை பார்வையிட்ட நீதியமைச்சர்

மனித புதைகுழிகள் உள்ளதாக கூறப்படும் குருக்கள்மடம் பகுதியை பார்வையிட்ட நீதியமைச்சர்

11 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில், சர்வதேச தரநிலைகளுக்கு இணங்க நியாயமான, பாரபட்சமற்ற, வெளிப்படையான விசாரணை செயல்முறைக்கு அதிகபட்ச ஒத்துழைப்பு வழங்கப்படும் என நீதி அமைச்சு அறிவித்துள்ளது.

மட்டக்களப்பு குருக்கள்மடம் மனித புதைகுழி வளாகத்திற்கு நேற்று (05) கள விஜயம் மேற்கொண்ட, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இந்த விடயம் தொடர்பில் கருத்துரைத்துள்ளார்.

அதற்கமைய, குருக்கள்மடம் புதைகுழி தொடர்பான முறைபாடுகளை நீதி அமைச்சு ஏற்று, அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு, கண்ணியமான தீர்வுகளை அரசாங்கம் பெற்றுக் கொடுக்கும் எனவும் நீதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்கமைய, வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் தற்போதைய அரசாங்கத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையின் காரணமாக, காணாமல் போனவர்கள் தொடர்பில் அதிகமாக முறைப்பாடுகளை சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், காணாமல் போனோர் தொடர்பில் ஆராயும் அலுவலகத்தின் தலையீட்டின் கீழ், செம்மணி மனித புதைகுழியின் அகழ்வாராய்ச்சி, சர்வதேச தர நிர்ணயங்களுக்கு அமைய, வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாகவும் நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நீதி மற்றும் உண்மையைத் தேடுவது இந்த அரசாங்கத்தின் இறுதிப் பொறுப்பாகும் என நீதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்கமைய, அமைதி மற்றும் நல்லிணக்கத்தை நிலைநாட்ட, கடந்த காலத்தின் கசப்பான சம்பவங்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வலியுறுத்தியுள்ளார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அதிகபட்ச சில்லறை விலையை மீறி அரிசி விற்பனை; இரண்டு கடைகளுக்கு ரூ.3 இலட்சம் அபராதம்!
செய்திகள்

அதிகபட்ச சில்லறை விலையை மீறி அரிசி விற்பனை; இரண்டு கடைகளுக்கு ரூ.3 இலட்சம் அபராதம்!

August 9, 2026
சிறு கடனாளிகளுக்கு கடும் சட்டம்; பெரும் கடனாளிகளுக்கு ஏன் சலுகை? – பாராளுமன்றத்தில் சாணக்கியன் கேள்வி
செய்திகள்

சிறு கடனாளிகளுக்கு கடும் சட்டம்; பெரும் கடனாளிகளுக்கு ஏன் சலுகை? – பாராளுமன்றத்தில் சாணக்கியன் கேள்வி

August 9, 2026
தமிழர் அரசியல் பேரவையில் இணையுமாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு ரவூப் ஹக்கீம் அழைப்பு
அரசியல்

தமிழர் அரசியல் பேரவையில் இணையுமாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு ரவூப் ஹக்கீம் அழைப்பு

August 9, 2026
ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஓமான் ஒப்பந்தம் மட்டும் போதாது; ஈரான்
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஓமான் ஒப்பந்தம் மட்டும் போதாது; ஈரான்

August 9, 2026
சாவகச்சேரி பிரதான சாலையில் அமைந்துள்ள வேப்பமரங்களை வெட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை
செய்திகள்

சாவகச்சேரி பிரதான சாலையில் அமைந்துள்ள வேப்பமரங்களை வெட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

August 9, 2026
போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் சுதந்திரக்கட்சியின் தொகுதி தலைவர் கைது
செய்திகள்

போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் சுதந்திரக்கட்சியின் தொகுதி தலைவர் கைது

August 9, 2026
Next Post
எல்ல பேருந்து விபத்தில் தொடர்புடைய ஜீப் சாரதி கைது

எல்ல பேருந்து விபத்தில் தொடர்புடைய ஜீப் சாரதி கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.