அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பென்டகனின் பெயரை போர் திணைக்களம் என மாற்ற முடிவு செய்துள்ளார்.
மேலும், அந்நாட்டின் பாதுகாப்பு செயலாளர் பதவியை போர் செயலாளராக மாற்றும் நிறைவேற்று ஆணையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதேசமயம் பென்டகன் என்பது அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை தலைமையகமாகும். இது வாஷிங்டன் டி.சி. அருகே, ஐந்து பக்க வடிவில் கட்டப்பட்ட ஒரு மிகப்பெரிய கட்டிடமாகும். அமெரிக்க இராணுவத்தின் நிலைத் தளம், கடற்படை, விமானப்படை, கடலோர காவல்படை, விண்வெளிப் படை ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைக்கும் மையமாக பென்டகன் செயல்படுகிறது. உலகின் மிக வலிமையான இராணுவத் தலைமையகங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.








