காத்தான்குடி காரிகை கலை இலக்கிய மன்றத்தின் மூன்றாவது சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (03) ஏறாவூர் அல் முனீறா பாலிகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
“புவி வெப்பமடைதலில் இருந்து விடுதலை பெறுவோம்” என்ற தொனிப்பொருளை முன்னிறுத்தி நடத்தப்பட்ட சித்திரப் போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு இச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நிகழ்வில், பள்ளி அதிபர் எம்.எச். மஹாத் சேர் தலைமையேற்று சிறப்பித்தார். மேலும், காரிகை கலை இலக்கிய மன்றத்தின் ஸ்தாபகத் தலைவி ஜாஹிதா ஜலால்தீன் அவர்கள் அதிபரிடம் சான்றிதழ்களை கையளித்ததையடுத்து மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.























