பொலன்னறுவையில் உள்ள பராக்கிரம சமுத்திரக் குளச் சுவரின் கற்களுக்கு இடையில் மோட்டார் குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக பொலன்னறுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பராக்கிரம சமுத்திரத்தில் நீர்மட்டம் குறைந்துள்ளதால் மோட்டார் குண்டு மேலே வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும், இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலன்னறுவை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.








