பாடசாலைகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டுள்ள பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்குமாறு கோரி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று (08) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இப்போராட்டம் இலங்கை பட்டதாரி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
போராட்டத்தில் கலந்து கொண்ட பட்டதாரிகள் “நாங்கள் கற்பித்தும் பெறுபேறு ஏன் வரவில்லை?”, “போட்டிப் பரீட்சை மட்டும் தான் தகுதியா?”, “பட்டம் பெற்றும் ஏன் எங்களை புறக்கணிக்கிறீர்கள்?”, “ஆசிரியர் பணிக்கு அமர்த்த முடிந்தால் நியமனம் வழங்க முடியாதா?” போன்ற கோஷங்களை எழுப்பினர்.
மேலும், “ஐந்து வருட பாடசாலை அனுபவத்தையும் போட்டிப் பரீட்சையில் ஏன் கணக்கில் எடுக்கவில்லை?” என்ற கேள்வியையும் பதாகைகளில் முன்வைத்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்கள் கோரிக்கைக்கு அரசு உடனடி தீர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

















