மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட இருநூறுவில் உன்னிச்சை கிராமத்தில் அமைந்துள்ள இருநூறுவில் அரசு தமிழ் கலவன் பாடசாலையின் மாணவி ரசிக்காந்தன் நிதுஷாணி, சமீபத்தில் வெளியிடப்பட்ட தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 135 புள்ளிகள் பெற்று பாடசாலைக்கும், தன் கிராமத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
குறிப்பாக, 73 ஆண்டுகளாக இயங்கிவரும் இப்பாடசாலையில் வெட்டுப்புள்ளி தாண்டிய முதல் மாணவியாக இவர் பதிவாகியுள்ளார். மேலும், அப் பாடசாலையின் அனைத்து மாணவர்களும் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர்.

இந்தச் சாதனைக்காக, அதிபர் கு. பிரபாகரன் அவர்களின் வழிகாட்டுதலுடனும், மாணவர்களுக்கு பாடம் கற்பித்த ஆசிரியர் இ. பிரபாரெத்தினம் அவர்களின் அர்ப்பணிப்புடனும் கிடைத்த வெற்றியாகக் கருதப்பட்டு, இருவருக்கும் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.









