நேபாளத்தில் ஊழல் எதிர்ப்பு போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்நாட்டின் அரசியல் சூழலில் பெரிய அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. பிரதமர் பதவி விலகியதைத் தொடர்ந்து, ஜனாதிபதி ராம் சரண் பவுடல் தனது பதவியையும் இராஜினாமா செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சமீப மாதங்களில் ஊழல், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் அரசியல் நிலைத்தன்மை குறித்த குற்றச்சாட்டுகளை எதிர்த்து ஆயிரக்கணக்கான மக்கள் தலைநகர் காத்த்மாண்டுவை உள்பட பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், மக்களின் அழுத்தம் அதிகரித்ததை அடுத்து பிரதமர் ராஜினாமா செய்ய நேரிட்டது.

இதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி பவுடலும் பதவியை விலகுவதாக அறிவித்துள்ளார். அவரது இராஜினாமா நேபாளத்தின் அரசியல் அமைப்பில் பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் விமர்சகர்கள் தெரிவிப்பதாவது, இந்த இராஜினாமா சம்பவங்கள் நேபாளத்தில் புதிய அரசியல் மாற்றத்திற்கும், ஊழல் எதிர்ப்பு சட்டங்களை வலுப்படுத்துவதற்கும் வழிவகுக்கும் என்பதாகும்.








