முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்னவின் விளக்க மறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 24ம் திகதி வரையில் நிஷாந்தவின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. பொல்கஹாவெல நீதவான் நீதிமன்றம் இந்த விளக்க மறியல் உத்தரவினை பிறப்பித்துள்ளது.
நிஷாந்த கடற்படை புலனாய்வு பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றிய போது பொத்துஹர பிரதேசத்தில் இடம்பெற்ற கடத்தல் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த விசாரணைகளின் அடிப்படையில் கடந்த ஜூலை மாதம் நிஷாந்த உலுகேதென்னவை புலனாய்வு பிரிவினர் கைது செய்தனர்.








