மட்டக்களப்பு பிள்ளையாரடியில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடத்தின் பீடாதிபதியாக பேராசிரியர் தில்லைநாதன் சதானந்தன் இரண்டாவது தடவையாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பல்வேறு பட்டப்படிப்புகள் மற்றும் பட்டமேற்படிப்புகளை நிறைவு செய்துள்ள அவர், ஸ்கொட்லாந்து பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்றதுடன் சட்டத்தரணியாகவும் செயற்படுகின்றார்.

2022 முதல் 2025 வரையிலான தனது முதல் பதவிக்காலத்தில் பீடத்தில் பல்வேறு பௌதீக வள அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தார். அவரது முதல் பதவிக்காலம் 04.09.2025 அன்று நிறைவடைந்த நிலையில், மீண்டும் 05.09.2025 அன்று பீடாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அவர், 04.09.2028 வரை தொடர்ந்து இந்தப் பதவியில் கடமையாற்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.








