இந்த மாதத்தின் முதல் 14 நாட்களில் மொத்தம் 75,358 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அவர்களில் இந்தியாவிலிருந்து 21,389 பேர் வருகை தந்துள்ளதாகவும் இந்த ஆண்டில் மொத்தமாக இதுவரை 16,41,881 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக அதிகாரசபை மேலும் குறிப்பிட்டுள்ளது.








