கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமேவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அருகில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து ட்ரோன் கேமரா பறக்கவிட்ட சீன நாட்டவரை தலதா மாளிகை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சீன நாட்டவர், ட்ரோன் கேமரா மற்றும் அதைப் பறக்கவிடப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களுடன், கண்டி தலைமையக பொலிஸ் நிலையத்துடன் இணைக்கப்பட்ட சுற்றுலா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.









