Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மாகாணசபை குறித்து தமிழ் கட்சிகளுக்கிடையில் ஒருமித்த நிலைப்பாடு தேவை; இந்திய தூதுவர்

மாகாணசபை குறித்து தமிழ் கட்சிகளுக்கிடையில் ஒருமித்த நிலைப்பாடு தேவை; இந்திய தூதுவர்

9 months ago
in அரசியல், செய்திகள்

தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையே ஒருமித்த நிலைப்பாடு இருந்தால் மாத்திரமே மாகாணசபை தொடர்பில் காத்திரமான நடவடிக்கைகளை இந்தியாவினால் முன்னெடுக்கக்கூடியதாக இருக்கும் என்று இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.

மாகாணசபையை வலியுறுத்தும் தமிழ் பேசும் அரசியல் கட்சிகள், சில சந்தர்ப்பங்களில் அந்த மாகாண சபை தேவையில்லையென்றும் தெரிவிக்கும் நிலைப்பாடு இருந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான நிலையில் இவ் விடயத்தில் இந்தியாவினால் ஒருமித்த நிலைப்பாட்டை முன்னெடுத்து இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதில் சிக்கல் நிலை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியத் தூதரகத்தில் நேற்று (17) நடைபெற்ற தமிழ் ஊடக நிறுவன பிரதானிகளுடனான சந்திப்பின் போது இந்த விடயங்களை தூதுவர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்திய – இலங்கை சமாதான உடன்படிக்கை 1987ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. இதன்கீழ் தமிழ் பேசும் மக்களுக்காக 13ஆவது அரசியல் திருத்தத்தின் கீழ் மாகாணசபை நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. 1988 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல்கள் சட்டம் (1988 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆந் திகதி) இதற்காக தேர்தல் முதல் முறையாக 1988 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 04 ஆம் திகதி நடைபெற்றது.

இறுதியாக இந்தத்தேர்தல் 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதி நடைபெற்றது. வடக்கு கிழக்கு இணைந்த மாகாணங்களுக்கு அப்பால் அதாவது கிழக்கு பிரிந்த மாகாணத்திற்காக தேர்தல் நடைபெற்றது.

வட மத்திய மாகாணத்திற்காக தேர்தல் ( 08.09.2012 ) சபரகமுவ மாகாணத்திற்காக தேர்தல் (08.09.2012) மத்திய மாகாணத்திற்காக தேர்தல் (21.09.2013) வட மாகாணத்திற்காக தேர்தல் (21.09.2013 ) வடமேற்கு மாகாணத்திற்காக தேர்தல் (21.09.2013) மேற்கு மாகாணத்திற்காக தேர்தல் (29.03.2014) தென் மாகாணத்திற்காக தேர்தல் (29.03.2014) ஊவா மாகாணத்திற்காக தேர்தல் (20.09.2014) நடைபெற்றது.

கடந்த 11 வருடங்களாக மாகாணசபை தேர்தல் நடைபெறுவதில் இலுபறி நிலை இருந்துவருகிறது. இந்நிலையில் மாகாண சபை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு தொடர்பில் கேட்கப்பட்ட போதே தூதுவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் நிலைப்பாட்டில் ஐக்கியம் இல்லாத போதிலும் இந்தியா மாகாண சபை தொடர்பில் தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்திவருவதாகவும் தூதுவர் தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையில் இந்தியா மாகாண சபைக்குட்பட்ட அதிகாரங்கள் தொடர்பில் குறிப்பிட்டுள்ளது.

வடக்கு கிழக்கு இணைந்த மாகாணத்தில் இலங்கை தமிழ் பேசும் மக்களுக்கு இந்த மாகாணசபையின் கீழ் முழுமையான பிராந்திய நிர்வாகம் நடைபெறவேண்டும் என்பதில் இந்தியா ஆர்வமாக இருந்து வருகிறது. அதில் எந்த சந்தேகத்துக்கும் இடமில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

ஆனால் தமிழ் அரசியல் கட்சிகளின் மத்தியில் விசேடமாக வடக்கு, கிழக்கில் உள்ள அரசியற்கட்சிகளுக்கிடையில் இந்த விடயத்தில் ஒருமித்த கருத்துப்பாடு இல்லை. இந்த கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து மாகாண சபை தொடர்பில் எழுத்து மூலம் எமக்கு உறுதியான நிலைப்பாட்டை அறியத்தந்தால், இந்தியா பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக முன்னெடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஈரான் மீது அமெரிக்கா கடுமையான தாக்குதல் நடத்தும்; டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை!
செய்திகள்

ஈரான் மீது அமெரிக்கா கடுமையான தாக்குதல் நடத்தும்; டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை!

June 11, 2026
அதிபர் இடமாற்றத்தை இரத்து செய்யக் கோரி ஏறாவூர் மிஸ்நகர் அல்-அஷ்ரப் வித்தியாலயத்தில் ஆர்ப்பாட்டம்!
செய்திகள்

அதிபர் இடமாற்றத்தை இரத்து செய்யக் கோரி ஏறாவூர் மிஸ்நகர் அல்-அஷ்ரப் வித்தியாலயத்தில் ஆர்ப்பாட்டம்!

June 11, 2026
உணவு தயாரித்தல், நுகர்வில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து எச்சரிக்கை!
செய்திகள்

உணவு தயாரித்தல், நுகர்வில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து எச்சரிக்கை!

June 11, 2026
கிரான் மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்வு!
செய்திகள்

கிரான் மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்வு!

June 11, 2026
பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் போல் பயம்காட்டி பணம் பறித்த குழு
செய்திகள்

பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் போல் பயம்காட்டி பணம் பறித்த குழு

June 11, 2026
வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவிற்கு எதிராக யாழில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்
செய்திகள்

வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவிற்கு எதிராக யாழில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்

June 11, 2026
Next Post
வீதிகளில் சிதறிக்கிடக்கும் உடல்கள்; இதுவரை 65 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழப்பு

வீதிகளில் சிதறிக்கிடக்கும் உடல்கள்; இதுவரை 65 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.