Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பாடசாலைக்குள் வெளிநாட்டு சிகரட்டுகளை விற்பனை செய்த மாணவன்; கடை உரிமையாளர் கைது

பாடசாலைக்குள் வெளிநாட்டு சிகரட்டுகளை விற்பனை செய்த மாணவன்; கடை உரிமையாளர் கைது

9 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மொனராகலையில் தணமல்வில கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் பாடசாலைக்குள் வெளிநாட்டு சிகரட்டுகளை விற்பனை செய்வதாக தணமல்வில பொலிஸாருக்கு முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

தணமல்வில கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் 11 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் ஏனைய மாணவர்களுக்கு வெளிநாட்டு சிகரட்டுகளை விற்பனை செய்வதாக அதே பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் சிலர் பாடசாலை அதிபரிடம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து பாடசாலை அதிபர், சந்தேக நபரான மாணவனை அழைத்து சோதனையிட்டுள்ளார்.

இதன்போது சந்தேக நபரான மாணவனிடமிருந்து வெளிநாட்டு சிகரட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து பாடசாலை அதிபர் இது தொடர்பில் தணமல்வில பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் பொலிஸாரால் நடத்தப்பட்ட விசாரணைகளில், சந்தேக நபரான மாணவன் சூரியவெவ பிரதேசத்தில் உள்ள கடை ஒன்றில் இருந்து இந்த வெளிநாட்டு சிகரட்டுகள் கொள்வனவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, சூரியவெவ பிரதேசத்தில் உள்ள கடையின் உரிமையாளரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில், கடை உரிமையாளர் சுங்கவரி செலுத்தாமல் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் பல தடவைகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கடை உரிமையாளர் சந்தேக நபரான மாணவனுக்கு 100 ரூபாய்க்கு சிகரட்டுகளை விற்பனை செய்துள்ள நிலையில் சந்தேக நபரான மாணவன் அதனை பாடசாலைக்குள் 200 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் சந்தேக நபரான கடையின் உரிமையாளர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தணமல்வில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அனுமதிப்பத்திரமின்றி 6,000 கிலோ கழிவுத் தேயிலை கடத்தியவர் கைது!
செய்திகள்

அனுமதிப்பத்திரமின்றி 6,000 கிலோ கழிவுத் தேயிலை கடத்தியவர் கைது!

June 12, 2026
தென் கொரிய முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு 30 ஆண்டு சிறைத்தண்டனை!
உலக செய்திகள்

தென் கொரிய முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு 30 ஆண்டு சிறைத்தண்டனை!

June 12, 2026
ரணிலுக்கு “புதிய உடல், புதிய இதயம்” பொருத்தப்பட்டுள்ளது; ஹரீன் பெர்னாண்டோ
செய்திகள்

ரணிலுக்கு “புதிய உடல், புதிய இதயம்” பொருத்தப்பட்டுள்ளது; ஹரீன் பெர்னாண்டோ

June 12, 2026
“ஈழத்து மருமகன் என்ற வகையில் எங்களுக்கு உரிமை உண்டு”; முதலமைச்சர் விஜயிடம் கோரிக்கை!
செய்திகள்

“ஈழத்து மருமகன் என்ற வகையில் எங்களுக்கு உரிமை உண்டு”; முதலமைச்சர் விஜயிடம் கோரிக்கை!

June 12, 2026
பயிர் செய்கையில் முதலீடு செய்யுமாறு மோசடி செய்யும் கும்பல்; மத்தியவங்கி எச்சரிக்கை
செய்திகள்

பயிர் செய்கையில் முதலீடு செய்யுமாறு மோசடி செய்யும் கும்பல்; மத்தியவங்கி எச்சரிக்கை

June 12, 2026
அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு வானிலை எச்சரிக்கை; பலத்த காற்று, இடியுடன் மழைக்கு வாய்ப்பு
செய்திகள்

அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு வானிலை எச்சரிக்கை; பலத்த காற்று, இடியுடன் மழைக்கு வாய்ப்பு

June 12, 2026
Next Post
பாடசாலை நேரங்களில் கனிமப் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கான தடை உத்தரவில் திருத்தம்

பாடசாலை நேரங்களில் கனிமப் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கான தடை உத்தரவில் திருத்தம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.