முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் அனுத பண்டார உள்ளிட்ட ஐந்து சந்தேகநபர்களை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (27) உத்தரவிட்டுள்ளது.
பணம் கொள்ளையிடப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்கள் இன்று காலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
வழக்கை விசாரித்த நீதவான், ஒவ்வொருவரையும் ரூ. 500,000 ரொக்கப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டதுடன், மேலதிக விசாரணைகள் நிறைவடையும் வரை அவர்கள் வெளிநாடு செல்லவும் தடை விதித்தார்.
சீனப் பிரஜை ஒருவரிடமிருந்து ரூ. 20 மில்லியன் பணம் கொள்ளையிடப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், அனுத பண்டார உள்ளிட்ட ஐவர் கடந்த ஜூலை 21 ஆம் தேதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.








