தெஹிவளை, அல்விஸ் வீதியில் உள்ள தொடர்மாடி குடியிருப்புக்கு அருகில் சீன பிரஜை ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று (18) இடம்பெற்றுள்ளது.
தெஹிவளை பொலிஸ் நிலையத்திற்கு தொலைபேசி அழைப்பு மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட சோதனையில் வீடொன்றின் சமையலறைக்குப் பின்னால் உள்ள பகுதியில் இருந்து சீன பிரஜையின் சடலம் மீட்கப்பட்டுள்ளார்.

தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் சீன மற்றும் மியான்மார் பிரஜைகள் குழு ஒன்று தொடர்மாடி குடியிருப்பின் 10வது மாடியில் வசித்து வந்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்ட சீன பிரஜை மேல் மாடியிலிருந்து தவறி கீழே விழுந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








