மட்டக்களப்பு மாநகரசபை, பொதுமக்கள் அனைவருக்கும் சுகாதாரமும் சுத்தமுமான சூழலை நிலைநிறுத்தும் நோக்கில் சில முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
அந்த அடிப்படையில்,
- கட்டாக்காலியாக வீதிகளில் திரியும் மாடுகளை கண்டால் கீழுள்ள வட்ஸ்அப் இலக்கத்திற்கு அறிவிக்கவும்.
- வீட்டின் முன்னே உள்ள வீதியோரங்களை குறித்த வீட்டின் உரிமையாளரே துப்பரவு செய்தல் வேண்டும்.
- வீதியோரங்கள் மற்றும் வடிகான்களில் பொலித்தீன்கள் அல்லது உக்காத குப்பைகளை எரிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.
- எமது மாநகரசபை வாகனம் வரும் போது மட்டுமே குப்பைகளை வெளியில் எடுத்து வைத்தல் வேண்டும்.
- குப்பைகளை உக்கக்கூடிய கழிவு, உக்காத கழிவு என தரம் பிரித்து வைத்தால் மாத்திரமே கழிவுகள் அகற்றப்படும்.
- உணவகங்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்கள் வீதியோர வடிகான்களில் கழிவு நீரினை விடுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.
- இலஞ்சம் கொடுப்பதும், இலஞ்சம் வாங்குவதும் குற்றம்” என்பதால் கழிவகற்றலில் ஈடுபடும் ஊழியர்களுக்கு பணம் கொடுக்க வேண்டாம். பணம் கேட்பார்களாயின் கீழுள்ள வட்ஸ்அப் இலக்கத்திற்கு அறிவிக்கவும்.
என தனது முகப்புத்தக பக்கத்தில் மட்டு மாநகர சபை அறிவித்துள்ளது.
வாட்ஸ் அப் இலக்கம் ( (0712288222)









