ஏறாவூர் பற்று பிரதேச சபை அமர்விற்கு இம்முறை ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதுவரை நடைபெற்று வந்த அனைத்து சபை அமர்விற்கும் பிரதேச ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு கடிதங்கள் அனுப்பிய ஏறாவூர் பற்று தவிசாளர் நேற்று முன்தினம் (18) நடந்த சபை அமர்விற்கு ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை.
பாராளுமன்ற சபை அமர்வையே அரசாங்கம் நேரடி ஒளிபரப்பு செயயும் போது சாதாரண பிரதேச சபை அமர்வில் நடக்கும் விடயங்களை ஏன் மூடி மறைக்க வேண்டும்.
கடந்த சபை அமர்வில் புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்ற முக்கிய பிரேரணை சபையில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் தவிசாளர் ஏன் ஊடகங்களுக்கு அழைப்பு விடுக்காது புறக்கணித்தார் என்ற கேள்வி எழுகிறது.
புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலை தொடர்பாக தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் நேரடியாக ஊடகங்கள் ஊடாக எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில்.
ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாளரோ, கல்குடா தேர்தல் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரோ இதுவரை புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலை குறித்து வாய் திறக்காத நிலையில் காணப்படுகின்னர்.

கடந்த சபை அமர்வில் கொண்டுவரப்பட்ட புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலைக்கு எதிரான பிரேரணையின் போது தண்ணீர் தொழிற்சாலைக்கு எதிராக தவிசாளர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
இன் நிலையில் அன்றை சபை அமர்விற்கு தவிசாளர் ஊடகங்களை அழைக்காதது ஏன் என்ற கேள்வி எழுகிறது.
இந்த நிலையில் கடந்த சபை அமர்விற்கு முந்திய சபை அமர்வின் போது தேசிய மக்கள் சக்தி உறுப்பினருக்கும், தவிசாளருக்கும் இடையே சில வாக்குவாதங்கள் ஏற்பட்ட நிலையில் அது குறித்த காணொளியும் சமூக ஊடகங்களில் வைரலாகி இருந்தது.

அத்துடன் இது குறித்த பல்வேறுபட்ட விமர்சனங்களும் சமூக ஊடகங்கள் வாயிலாக மக்களிடம் இருந்து வெளிவந்த வன்னம் இருந்தது. எவ்வாறான ஒரு சூழ்நிலையில் இனி வரும் காலங்களில் இவ்வாறான விமர்சனங்களை தவிர்ப்பதற்காக தவிசாளர் ஊடகங்களை புறக்கணித்துள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.








