Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாகரை பிரதேச சபையில் உள்ளூராட்சி வார விழிப்புணர்வு நிகழ்வுகள்

வாகரை பிரதேச சபையில் உள்ளூராட்சி வார விழிப்புணர்வு நிகழ்வுகள்

11 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு, கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபையின் நிகழ்வுகள் இன்று (20) சபை தவிசாளர் க. தெய்வேந்திரன் தலைமையில் இடம்பெற்றன.

இலக்கியம், கல்வி மற்றும் நூலக மேம்பாடு எனும் தலைப்பில் நடைபெற்ற இன்றைய நிகழ்வில், வாகரை பிரதேச மாணவர்களுக்கான உள்ளுராட்சி வார விழிப்புணர்வு கருத்தரங்கு இடம்பெற்றது. இதில், பொதுமக்கள் எவ்வாறு உள்ளுராட்சி மன்றங்களின் சேவைகளைப் பெற முடியும், அதன் பயன்கள் என்ன என்பன குறித்து மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், உள்ளுராட்சி தொடர்பான வினாக்கள் அடங்கிய பொது அறிவு வினா-விடை போட்டி நடத்தப்பட்டு, வெற்றியாளர்களும் பங்கேற்ற மாணவர்களும் சான்றிதழ்கள் மற்றும் பரிசுப் பொருட்களுடன் கௌரவிக்கப்பட்டனர். அதேவேளை, இலக்கியம் மற்றும் கல்வி மேம்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.

நிகழ்வில் பிரதம அதிதிகளாக உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ந. ஜங்கரன், உதவிக் கல்விப் பணிப்பாளர் ம. விஜி மற்றும் சபை செயலாளர் தொ.செ.பி. குயின்ரஸ் கலந்து கொண்டனர்.

பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ், “வளமான நாடும் அழகான வாழ்க்கையும்” என்ற எண்ணக்கருவில் “மறுமலர்ச்சி நகரம்” எனும் தொனிப்பொருளில், 2025 செப்டம்பர் 15 முதல் 21 வரை நாடு முழுவதும் உள்ளுராட்சி வார நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதேபோல், வாகரை பிரதேச சபையின் நிறைவு நிகழ்வு வரும் செப்டம்பர் 21ஆம் திகதி வாகரை கராச்சார மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதில், பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு கலந்துகொள்ளவுள்ளார். சிறப்பு அதிதிகளாக, கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் திருமதி க. அமலினி மற்றும் மட்டக்களப்பு உள்ளுராட்சி உதவி ஆணையாளர் திருமதி எம்.ஆர். எவ். றிப்கா ஷபீன் ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஓமான் ஒப்பந்தம் மட்டும் போதாது; ஈரான்
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஓமான் ஒப்பந்தம் மட்டும் போதாது; ஈரான்

August 9, 2026
சாவகச்சேரி பிரதான சாலையில் அமைந்துள்ள வேப்பமரங்களை வெட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை
செய்திகள்

சாவகச்சேரி பிரதான சாலையில் அமைந்துள்ள வேப்பமரங்களை வெட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

August 9, 2026
போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் சுதந்திரக்கட்சியின் தொகுதி தலைவர் கைது
செய்திகள்

போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் சுதந்திரக்கட்சியின் தொகுதி தலைவர் கைது

August 9, 2026
கிளிநொச்சி வங்கியில் போலி பணத்தை வைப்பிலிட வந்தவர்கள் கைது
செய்திகள்

கிளிநொச்சி வங்கியில் போலி பணத்தை வைப்பிலிட வந்தவர்கள் கைது

August 9, 2026
யாழில் வீட்டை சுத்தம் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி
செய்திகள்

யாழில் வீட்டை சுத்தம் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

August 9, 2026
சம்மாந்துறையில் கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு; உரிமையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை
செய்திகள்

சம்மாந்துறையில் கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு; உரிமையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை

August 9, 2026
Next Post
வாழைச்சேனை கண்ணகிபுரம் பாரதி பாலர் பாடசாலையின் முதல் விளையாட்டு விழா

வாழைச்சேனை கண்ணகிபுரம் பாரதி பாலர் பாடசாலையின் முதல் விளையாட்டு விழா

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.