வாழைச்சேனை கண்ணகிபுரம் பாரதி பாலர் பாடசாலையின் முதலாவது விளையாட்டு விழா இன்று மாலை, பெற்றோர் சங்கத் தலைவர் அ. மோகனராஜ் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வின் போது மாணவர்களின் பல்வேறு விளையாட்டு போட்டிகள், உடற்பயிற்சி நிகழ்ச்சிகள், வினோத உடைப் போட்டிகள் மற்றும் பெற்றோர் பங்கேற்ற விளையாட்டுகள் இடம்பெற்றன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பங்கேற்ற சிறார்களுக்கும் பரிசுப் பொருட்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
விழாவில் பிரதம அதிதிகளாக திருமதி ஜெயானந்தி அருள்செல்வம் மற்றும் உதவி பிரதேச செயலாளர் திருமதி டிலக்ஷினி சசிதரன் கலந்து கொண்டனர். மேலும், கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்கள் செ. யோகநாதன் மற்றும் திருமதி டிலுஜா மனோராஜ் சிறப்பு பங்கேற்பை ஏற்படுத்தினர்.
விசேட அதிதிகளாக சமூக சேவை உத்தியோகத்தர் ச. ஜெயசேகர், பாலர் பாடசாலை வெளிகள இணைப்பாளர் திருமதி கயல்விழி வினோதரன், திட்ட இணைப்பாளர் த. ரொசாந்தன் ஆகியோரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.





















