அம்பாறை மாவட்ட மோட்டார் வாகனத் திணைக்கள அலுவலகத்தின் அனைத்து அமைப்புகளும் நேற்று முதல் (20) இணையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இது பொது சேவைகளை நவீனமயமாக்குவதில் ஒரு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
இது தொடர்பான தொடக்கவிழா, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் அம்பாறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
தொழில்நுட்ப அமலாக்கப் பணிகள் South Asian Technologies மற்றும் Softlogic Information Technologies ஆகிய நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டதுடன், அந்த அமைப்பின் பராமரிப்பும் இவர்களால் மேற்கொள்ளப்படுகிறது. குறுகிய காலத்தில் அம்பாறை கிளையை இணையத்தில் செயல்படுத்தியது குறிப்பிடத்தக்க சாதனையாகும், இது பொதுமக்களுக்கு மேலும் வசதியான மற்றும் திறம்பட செயல்படும் சேவைகளை வழங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல், DMV (மோட்டார் வாகனத் திணைக்களம்) மீதமுள்ள அனைத்து மாவட்ட அலுவலகங்களையும் இவ்விரு தொழில்நுட்ப பங்காளிகளின் உதவியுடன் நவீன, பாதுகாப்பான மற்றும் குடிமக்கள் மையப்படுத்தப்பட்ட தகவல் தொடர்பு அமைப்பில் இணைக்கும் பணிகளை ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








