பலஸ்தீன அரசை பிரான்ஸ் முறையாக அங்கீகரித்துள்ளது.
இதன்படி இந்த நடவடிக்கையை எடுக்கும் நாடுகளின் வரிசையில் தற்போது பிரான்சும் இணைந்துள்ளது.
நியூயோர்க்கின் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையில் பேசிய ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், “அமைதிக்கான நேரம் வந்துவிட்டது” என்றும், “காசாவில் நடந்து வரும் போரை எதுவும் நியாயப்படுத்தவில்லை” என்றும் கூறியுள்ளார்.

மோதலுக்கு இரு நாடுகள் தீர்வு காண்பதற்கான திட்டங்களை மையமாகக் கொண்ட ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் பிரான்சும் சவூதி அரேபியாவும் ஒரு நாள் உச்சிமாநாட்டை நடத்துகின்றன.
எனினும் இந்த மாநாட்டில் ஜெர்மனி, இத்தாலி மற்றும் அமெரிக்கா என்பன கலந்து கொள்ளவில்லை.








