பேராதனைச் சாலையில் கடந்த (20) லாரி ஓட்டுநரிடம் இருந்து ரூ.90,000 பணத்தை இரசாயன கலந்த ரூ.5,000 நோட்டினால் ஓட்டுநரை மயக்கமுற செய்து வழிப்பறியில் ஈடுபட்டதா சந்தேகிக்கப்படும் மூன்று பாகிஸ்தான் நாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இலங்கையில் சுற்றுலா விசாவில் தங்கி, ஒழுங்குபடுத்தப்பட்ட பணச் சலவை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் நடந்தபோது, சந்தேகநபர்கள் லாரியை நிறுத்தி, ரூ.5,000 நோட்டினை மாற்ற உதவி கோரினர். அப்போது சந்தேகநபர்களில் ஒருவர் நோட்டினை ஓட்டுநரின் முகத்திற்கருகே வைத்ததாகவும், இதனால் அவர் மயங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டுநர் விழித்தபோது, அவரிடம் இருந்த ரூ.90,000 திருடப்பட்டிருந்தது. பின்னர் அவர் பேராதனை பொலிஸில் முறையிட்டார்.

CCTV காட்சிகள் மூலம் சந்தேகநபர்கள் பயன்படுத்திய வாகனம் அடையாளம் காணப்பட்டு, அது வட்டளையில் உள்ள வாடகை சேவையின் மூலம் பாகிஸ்தான் நாட்டு ஒருவரால் வாடகைக்கு எடுக்கப்பட்டதாக தெரியவந்தது. GPS மூலம் அந்த வாகனம் செப்டம்பர் 21ஆம் தேதி திஹகொட பகுதியிற்கு சென்றது கண்டறியப்பட்டதால், அங்கு பேராதனை மற்றும் திஹகொட பொலிஸார் இணைந்து சந்தேகநபர்களை கைது செய்தனர்.
பின்னர் சந்தேகநபர்கள் பேராதனை பொலிஸிடம் ஒப்படைக்கப்பட்டு, கண்டி மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிமன்றம் மேலதிக விசாரணைகள் நடைபெறும் வரை சந்தேகநபர்களை அக்டோபர் 2ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.








