இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மொரட்டுவை மாநகர சபையின் முன்னாள் மேயர் சமன் லால் பெர்னாண்டோவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம, சந்தேக நபரை 50 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 1 மில்லியன் ரூபா மதிப்புள்ள மூன்று சரீரப் பிணையிலும் விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.
சந்தேக நபரை வெளிநாடு செல்வதற்கு தடை விதித்த நீதவானால், மொரட்டுவை மாநகர சபைக்குள் நுழைவதைத் தடுக்கும் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மொரட்டுவை மாநகர சபையின் வீதி அபிவிருத்தி திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை தனது அன்புக்குரியவர்களுக்கு வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் சமன் லால் பெர்னாண்டோ நேற்று (23) காலை இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.








