காற்றாலை திட்டத்தின் ஊடாக நாங்கள் அழிக்கப்படப் போகிறோம் என்ற மக்களின் உணர்வுபூர்வமான போராட்டத்தை ஜனாதிபதி உடைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் கொள்கை என்பது, அபிவிருத்தி தான் முதலில் பின்னர் தான் மக்கள் என்ற வகையில் உள்ளதாக செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அவர் இதனைக் கூறினார்,
ஜனநாயக ரீதியான செயற்பாடுகள் என்பது ஏமாற்றத்தைத் தரும் வகையிலே உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஜனநாயகம் அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டதாலேயே ஆயுதப் போராட்டம் ஏற்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.








