மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது, வடக்கு கிழக்கில் தாங்கள் சுதந்திரமாக செயற்படுவதற்கு இடம் தரப்பட்டதாகவும், ஆனால், ஜனாதிபதி அநுர எங்களுக்கு அந்த இடத்தை தருவதில்லை என்றும் அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்திலும், கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்திலும் எமக்கு எவரிடமும் அடிபணிய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கவில்லை. வடக்கு, கிழக்கில் முதுகெலும்புடன் செயற்பட்டு பௌத்த சாசனத்தைப் பாதுகாத்தோம். அதேபோல், தொல்லியல் இடங்களைப் பாதுகாப்பதற்குரிய வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்தோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆனால் தற்போது அவற்றின் மீதான பிடிமானங்களை இழந்துள்ளோம். இது தொடர்பாகக் கதைக்கும் போது எம்மை அரச எதிர்ப்பாளர் என்று கூறுகின்றனர். அநுரவின் அரசாங்கம் எங்களை ஓரம் கட்டுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
பொலிஸ் நியைத்துக்குள் அடாத்தாக நுழைந்து, பொலிஸாரின் பணிக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றத்திற்காக அண்மையில் அம்பிட்டிய சுமணரத்ன தேரர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது








