ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, 9வது முறையாக ஆசிய சம்பியன் பட்டத்தை வென்றது.
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) இடம்பெற்ற பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி, 20 ஓவர்களில் 147 ஓட்டங்கள் குவித்தது.
அந்த இலக்கை எதிர்கொண்ட இந்திய அணி, நிதானமான ஆட்டத்துடன் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றியைப் பெற்றது.

இப்போட்டியில் இந்திய துடுப்பாட்ட வீரர்கள் தொடக்கத்தில் சில விக்கெட்டுகளை இழந்தபோதிலும், நடுப்பகுதியில் தைரியமாக விளையாடி இலக்கை எட்டிச் சென்றனர்.
இந்திய பந்துவீச்சாளர்களின் கட்டுப்பாடான பந்துவீச்சால் பாகிஸ்தான் அணியின் ஓட்டச்சேகரிப்பு கட்டுப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றியுடன் இந்தியா, ஆசிய கிண்ண வரலாற்றில் தனது ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.









