விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பொலிஸ் திணைக்கள கலாச்சாரப் பிரிவின் பிரதி பணிப்பாளர் எஸ்.எஸ்.பி சதீஷ் கமகே மற்றும் முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீர ஆகியோர் நேற்று (30) நீதிமன்ற உத்தரவின் பேரில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
எஸ்.எஸ்.பி சதீஷ் கமகே கடந்த ஆகஸ்ட் 14 அன்று இலஞ்ச குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டார்.
நேற்று (30) கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது பிணையில் விடுவிப்பு.
வெளிநாட்டு பயணத் தடையும் விதிக்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீர 2010 ஆம் ஆண்டு போலி ஆவணங்கள் தயாரித்து அரச காணி விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது ஆணை பிறப்பிக்கப்பட்டது.

நீண்டகாலம் தலைமறைவாக இருந்த பின்னர், 2024 மே 7 அன்று நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
நேற்று (30) கம்பஹா மேல்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது பிணையில் விடுவிப்பு.
ரூ. 5 இலட்சம் ரொக்க பிணை + ரூ. 5 இலட்சம் பெறுமதியான ஐந்து சரீர பிணை விதிக்கப்பட்டது.
வெளிநாட்டு பயணத் தடையும் அமல்படுத்தப்பட்டது.








