Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
16 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த முன்னாள் பொலிஸ் அதிகாரிக்கு 14 ஆண்டு சிறை தண்டனை

16 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த முன்னாள் பொலிஸ் அதிகாரிக்கு 14 ஆண்டு சிறை தண்டனை

11 months ago
in செய்திகள்

16 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைதான முன்னாள் பொரளை பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு ஹோமாகம மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாரசிங்க 14 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

கடந்த 2009 செப்டம்பர் 13 ஆம் திகதி அன்று, குற்றம் சாட்டப்பட்டவர் சிறுமியின் அந்தரங்க பாகங்களை பாலியல் ரீதியாகத் தொட தனது உடலின் ஒரு பகுதியைப் பயன்படுத்தி கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகவும், இதன் மூலம் தண்டனைச் சட்டத்தின் பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்ததாகவும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

தீர்ப்பை வழங்கிய நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவர் மீதான குற்றச்சாட்டுகளை நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளதாக தெரிவித்தார்.

சட்டமா அதிபர் சார்பாக ஆஜரான அரசு வழக்கறிஞர் ஷைனி வீரசூரிய, குற்றம் சாட்டப்பட்டவர், சட்டத்தை நிலைநிறுத்தும் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்ட ஒரு பொலிஸ் அதிகாரியாக இருந்து, ஒரு குழந்தைக்கு எதிராக இதுபோன்ற குற்றத்தைச் செய்ய தனது அதிகாரபூர்வ பதவியை கடுமையாக துஷ்பிரயோகம் செய்ததாக நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.

குற்றம் சாட்டப்பட்டவரின் நடத்தை பொலிஸ்பிரிவு அவர் மீது வைத்திருந்த நம்பிக்கையை மீறுவதாகவும், சட்ட அமுலாக்க அதிகாரிகளிடமிருந்து எதிர்பார்க்கப்படும் சமூக நீதியை கடுமையாக மீறுவதாகவும் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

சமூகத்தில் இதுபோன்ற குற்றங்கள் அதிகரித்து வருவதால், 1995 ஆம் ஆண்டு திருத்தம் மூலம் இலங்கையின் தண்டனைச் சட்டத்தில் கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் என்ற குற்றம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று நீதிமன்றம் தெரவித்தது.

அதன்படி, குற்றம் சாட்டப்பட்டவருக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மேலதிகமாக 25,000 ரூபா அபராதம் விதித்து பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடாக 400,000 ரூபா வழங்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மஹிந்த ராஜபக்ஸவின் இல்லம் சென்ற புதிதாக பதவியேற்றுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர்
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஸவின் இல்லம் சென்ற புதிதாக பதவியேற்றுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர்

September 9, 2026
20 வருடங்களாக தோட்ட தொழிலாளர்கள் பெறவேண்டிய கொடுப்பனவு; நாளை முதல்
செய்திகள்

20 வருடங்களாக தோட்ட தொழிலாளர்கள் பெறவேண்டிய கொடுப்பனவு; நாளை முதல்

September 9, 2026
சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு
செய்திகள்

சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

September 9, 2026
சொத்து விபரங்களை தாமதமாக சமர்ப்பிப்போருக்கு அபராதம்
செய்திகள்

சொத்து விபரங்களை தாமதமாக சமர்ப்பிப்போருக்கு அபராதம்

September 9, 2026
கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

September 9, 2026
கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்
செய்திகள்

கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்

September 9, 2026
Next Post
கதிர்காம வெஹெரகல நீர்த்தேக்கத்தில் ஆயுத மூட்டைகள் மீட்பு

கதிர்காம வெஹெரகல நீர்த்தேக்கத்தில் ஆயுத மூட்டைகள் மீட்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.