மண்முனைப்பற்று பிரதேச செயலகம் மற்றும் மகளிர், சிறுவர் விவகார அமைச்சின் நிதி ஆதரவுடன், பெண் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்கள் விற்பனைக்கான கண்காட்சி நேற்று (03) பிற்பகல் 2.30 மணிக்கு புதுக்குடியிருப்பு கண்ணகி மகாவித்தியாலய விளையாட்டு மைதானத்தில் திறந்துவைக்கப்பட்டது.
பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஷ் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் பெண்தொழில் முயற்சியாளர்களின் தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டு, கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.















