2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி செயலக பராமரிப்பு செலவுகள் தொடர்பான தகவல்கள் வெளிவந்துள்ளன. அதன்படி, இலங்கையின் எட்டு ஜனாதிபதி மாளிகைகளை பராமரிக்க 2024 ஆம் ஆண்டில் மொத்தம் 8 கோடி 1,54,422 ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகக் கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவை யாழ்ப்பாணம், அநுராதபுரம், கண்டி, மஹியங்கனை, நுவரெலியா, கதிர்காமம், பெந்தோட்டை மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் உள்ள மாளிகைகளுக்கானவை.
இந்த மாளிகைகளில் 392 பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் 16 சிவில் ஊழியர்கள் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.









