பிரான்ஸ் பிரதமர் செபஸ்டியன் லெகொர்னு தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
பிரான்ஸ் பிரதமர் செபஸ்டியன் லெகொர்னு இன்று (6) காலை ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோனை ஒரு மணி நேரமாக சந்தித்த பின்னர் எலிசே அரண்மனை இந்த அறிவிப்பை வெளியிட்டது.
ஃபிராங்கோயிஸ் பெய்ரூவின் முன்னைய அரசாங்கம் சரிந்ததைத் தொடர்ந்து லெகொர்னு பிரதமராக நியமிக்கப்பட்ட 26 நாட்களுக்குள் இராஜினாமா செய்துள்ளார்.
தேசிய சட்டமன்றத்தில் உள்ள பல கட்சிகள் லெகொர்னுவின் அமைச்சரவையின் அமைப்பை கடுமையாக விமர்சித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
லெகொர்னுவின் அமைச்சரவை பெய்ரூவின் அமைச்சரவையிலிருந்து பெரும்பாலும் மாறாமல் இருந்ததாகவும் அவ் அமைச்சரவையை வாக்களிப்பதன் மூலம் நிராகரிக்கப் போவதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.








