மட்டக்களப்பு முறக்கொட்டான்சேனை இராமகிருஷ்ணமிஷன் வித்தியாலயத்தில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சிரமதானப்பணி நேற்று (06) மேற்கொள்ளப்பட்டது.
அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் இணைந்து இவ் சிரமதானப் பணியினை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது கல்குடா வலய கல்விப்பணிப்பாளர் ரி.அனந்த ரூபனும் சமூகமளித்திருந்தார். கடந்த (30) ஆம் திகதியன்று குறித்த பாடசாலை கட்டடத்தில் இருந்து இராணுவத்தினர் வெளியேறியதைத் தொடர்ந்து மீண்டும் இங்கு மீளக் கல்வி நடவடிக்கைகளை தொடர பாடசாலை நிர்வாகம் மற்றும் கல்குடா கல்வி வலயம் என்பன அயராத முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை சீர் செய்யும் நடவடிக்கையில் கல்விப்பணிப்பாளர் ரி.அனந்தரூபன் ஈடுபட்டு வருகின்றார். அவற்றை நிவர்த்தி செய்யும் பட்சத்தில் கல்வி நடவடிக்கைகளை பின் தொடரலாம் என பாடசாலை அதிபர் ம.தவனேஸ்வரன் தெரிவித்தார்.














