Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கைரேகை இயந்திரங்களைப் பயன்படுத்தாமல் 339 கோடிக்கு மேல் கொடுப்பனவு பெற்றுள்ள சுங்க ஊழியர்கள்

கைரேகை இயந்திரங்களைப் பயன்படுத்தாமல் 339 கோடிக்கு மேல் கொடுப்பனவு பெற்றுள்ள சுங்க ஊழியர்கள்

11 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கடந்த ஆண்டு (2024) 2,335 இலங்கை சுங்க அதிகாரிகளுக்கு கைரேகை இயந்திரங்களைப் பயன்படுத்தாமல் சம்பளம், மேலதிக நேரக் கொடுப்பனவு, விடுமுறை ஊதியம் மற்றும் ஊக்குவிப்புத்தொகை என மொத்தம் 339 கோடி ரூபாவுக்கு மேல் (3,395,867,121) வழங்கப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிர்வாகச் சட்டம் மற்றும் சுற்றறிக்கைகளின்படி, அனைத்து அரச ஊழியர்களும் தங்கள் வருகை மற்றும் புறப்பாட்டைப் பதிவு செய்ய கைரேகை இயந்திரங்களைப் பயன்படுத்துவது கட்டாயமாகும்.

கைரேகை இயந்திரங்களைப் பயன்படுத்தாமல் சம்பளம், கூடுதல் நேரம், விடுமுறை ஊதியம் மற்றும் ஊக்கத்தொகைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இலங்கை சுங்க அதிகாரிகளுக்கு அரசாங்க ஒருங்கிணைந்த நிதியிலிருந்து வழங்கப்பட்ட மொத்தத் தொகை 230 கோடியே, 86 இலட்சத்து 94 ஆயிரத்து 777 ரூபாவாகும். (2,308,694,777)

மேலும், சுங்க கூடுதல் நேர சரக்கு ஆய்வுக் கட்டணம் மற்றும் தகவல் தொழில்நுட்ப தொடர்பு நிதியத்தால் 108 கோடியே 71 இலட்சத்து 72 ஆயிரத்து 344 (1,087,172,344) ரூபாவை செலுத்தியுள்ளது.

இந்த ஊழியர்கள் ஒரு நாளைக்கு 24 மணிநேரம் வரை மேலதிக நேரம் வேலை செய்வதாகவும் வருகை மற்றும் புறப்பாடு குறித்த சரியான உறுதிப்படுத்தல் இல்லாமல் அனைத்து கொடுப்பனவுகளும் செய்யப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் கூறுகிறது.

அனைத்து அதிகாரிகளும் கைரேகை இயந்திரங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று பொதுக் கணக்குக் குழு (COPA) முன்னதாக பரிந்துரைத்தது.

இந்தத் தகவல் 2024ஆம் ஆண்டுக்கான சுங்க செயல்திறன் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள தேசிய கணக்காய்வு அலுவலக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 5.37 கோடி ரூபாய் மதிப்பிலான ‘குஷ்’ போதைப்பொருளுடன் இரு பெண்கள் கைது!
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 5.37 கோடி ரூபாய் மதிப்பிலான ‘குஷ்’ போதைப்பொருளுடன் இரு பெண்கள் கைது!

September 9, 2026
போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் காட்டுயானையால் பாரிய சேதம்!
காணொளிகள்

போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் காட்டுயானையால் பாரிய சேதம்!

September 9, 2026
நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் தாலிக்கொடியைப் பறிகொடுத்துக் கண்ணீரில் கதறிய பெண்!
செய்திகள்

நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் தாலிக்கொடியைப் பறிகொடுத்துக் கண்ணீரில் கதறிய பெண்!

September 9, 2026
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் புதிய CEO-வாக விபுல் மிஸ்ரா நியமனம்!
செய்திகள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் புதிய CEO-வாக விபுல் மிஸ்ரா நியமனம்!

September 9, 2026
தண்டனையைக் குறைத்து தருவதாக கூறி இலஞ்சம் வாங்கிய நீதிமன்ற உதவியாளர் கைது
செய்திகள்

தண்டனையைக் குறைத்து தருவதாக கூறி இலஞ்சம் வாங்கிய நீதிமன்ற உதவியாளர் கைது

September 9, 2026
குருக்கள்மடம் சந்தேகத்திற்குரிய மனிதப் புதைகுழி; மண் படிம பரிசோதனைக்கு நீதிமன்ற உத்தரவு!
செய்திகள்

குருக்கள்மடம் சந்தேகத்திற்குரிய மனிதப் புதைகுழி; மண் படிம பரிசோதனைக்கு நீதிமன்ற உத்தரவு!

September 9, 2026
Next Post
மட்டக்களப்பு செங்கலடி கணபதிநகர் அறநெறி பாடசாலையில் தமிழர் இறை போற்றும் பஞ்சபுராண பண்ணிசைப் போட்டி

மட்டக்களப்பு செங்கலடி கணபதிநகர் அறநெறி பாடசாலையில் தமிழர் இறை போற்றும் பஞ்சபுராண பண்ணிசைப் போட்டி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.