நாட்டையும் மக்களையும் பாதிக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்காக, நடைமுறை மற்றும் மக்கள் சார்ந்த கொள்கை ஒப்பந்தங்களின் அடிப்படையில், ஐக்கிய தேசியக் கட்சியின் அடையாளத்தைப் பேணி, ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசியக் கட்சியும் தொடர்ந்து இணைந்து செயற்படும் என ஐக்கிய மக்கள் சக்தியும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை மற்றும் வழிகாட்டுதலின் கீழ், ஐக்கிய தேசியக் கட்சியுடன் அரசியல் ரீதியாக ஒரு பொதுவான வேலைத்திட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறுகிறார்.
நேற்று (09) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தி செயற்குழுக் கூட்டத்திலும், இதற்கு முன்னர் நடைபெற்ற இரண்டு நிர்வாகக் குழு கூட்டங்களிலும் இது ஏகமனதாக முடிவு செய்யப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.








