ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து கடலுக்கு சென்ற இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் கண்ணீருடன் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 30 மீனவர்களை நான்கு விசைப்படகுடன் இலங்கை கடற்படை கைது செய்து மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி 23ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை நம்பி மீனவர்களின் குடும்பத்தினர் வாழ்ந்து வந்த நிலையில் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சிறையில் உள்ளதால், வாழ்வாதாரம் இழந்துள்ளதாகவும் கைது செய்யப்பட்ட மீனவர்களின் கார்த்திக் என்ற மீனவரின் மனைவி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதால் பிரசவ நேரத்தில் தனது கணவன் தன்னுடன் இருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கைச் சிறையில் உள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய மத்திய மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்களின் குடும்பத்தினர் கண்ணீருடன் கோரிக்கை வைத்தனர்.








