காலி – பிலான பகுதியில் கழிப்பறை குழி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் வீட்டு கழிப்பறைக் குழியில் கார்பைடைப் பயன்படுத்தி எரிவாயு தயாரிக்க முற்பட்டபோது நேற்று (12) மாலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

50 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையே இச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் காலி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.








